Breaking News

கொரோனா வைரஸ் தொற்று கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 174 பேர் கிளிநொச்சியில்


கொரோனா வைரஸ் தொற்று கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 174 பேர் கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த 174 பேரும் இன்று காலை 5 பேருந்துகளில் இரணைமடு விமானப்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே அவர்களை இரணைமடு விமானப்ப1டை முகாமில் வைத்து 5 நாட்கள் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை