Breaking News

இத்தாலியில் உயிரிழந்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது

இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் உயிரிழந்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என அந்த நாட்டின் மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கொவிட் 19 நோய் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை துரதிஸ்டவசமாக கவலை தரும் விதத்தில் பெரிதாகி வருகின்றது என மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தொற்றுநோய்க்குள்ளான சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாள் மாலையிலும் வெளியிடப்படும் அதேவேளை பல மருத்துவர்கள் திடீரென உயிரிழக்கின்றனர் என மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை