Breaking News

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் மூவரை கைது


வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இன்று (21.03.2020) காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரையிலான காலப்பகுதியில் மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்
இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று (20.03.2020) மாலை 6.00 மணி தொடக்கம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (23.03.2020) காலை 6.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது தேவையற்ற விதமாக நடமாடிய மூன்று நபர்களையே இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்,
வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் செல்பவர்களுக்கு வவுனியா பொலிஸாரினால் விசேட அனுமதிப்பத்திரமும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை