Breaking News

யாழ்ப்பாணத்தில் சுவிட்சர்லாந்து போதகரின் ஆராதனை-209 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணத்தில் சுவிட்சர்லாந்து போதகரின் ஆராதனையில் கலந்துகொண்ட 209 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டார்.

இவர்களுடன் தொடர்புகளை பேணிய 18 குடும்பங்களை சேர்ந்தவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவர்களுக்கான தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையம் ஒன்று காங்கேசன்துறையில் அமைக்கப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை