Breaking News

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும், அதிபர்களுக்கும் கல்வி அமைச்சின் விஷேட அறிவித்தல்


மார்ச் 27 தொடக்கம் ஏப்ரல் 09 வரை பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களுக்கு கையொப்பம் இட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், பல்கலைக்கழக அனுமதிக்கான தமது விண்ணப்பங்களில் அதிபரின் கையொப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டிய மாணவர்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் பாடசாலைக்கு வருகைதர வேண்டும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை