கொரோனவை எதிர் கொள்ள நாங்கள் தாயர் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்திரு.சத்தியமூர்த்தி
யாழ் போதனா வைத்தியசாலையில் இதுவரையும் கொரானா நோய் சந்தேகத்தின் பேரில் 8 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் ஐவர் வெளியேறிவிட்டனர். மீதியுள்ள மூவரில் அவர்களது
பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அவர்களுக்கும் நோய் தொற்று இல்லையாயின் அவர்களும் வெளியேறுவார்கள்.
அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களும் கடுமையான நோயை கொண்டிருக்கவில்லை இப்போதைய நிலமையில் அவர்களுக்கு தேவையான போதிய வசதிகளை கொண்டிருக்கிறோம்
கொரானா நோய் விடுதியில் 20 படுக்கைகளை கொண்டதாக அமைந்துள்ளது.
கொரானா நோய் என உறுதிசெய்யப்பட்டால் தனியான அறை வசதிகளும் செய்யப்பட்டு பாராமரிக்கப்படும்
வடமாகாணத்தை பொறுத்தவரையில் இதுவரை நோய்தொற்று அறியப்படாமையால் மக்கள் பீதியடைய தேவையில்லை
வடபகுதி மக்கள் சுகாதார அமைச்சு, உலக சுகாதார நிறுவனம் போன்றவை கூறும் தற்காப்பு நடவடிக்கைகள் (ஒன்று கூடல்,ஒருவர் மற்றவருக்கு அருகில் செல்வதை தவிர்த்தல், பிறரை தொடுவதை தவிர்த்தல், அடிக்கடி கைகழுவுதல், பொது நிகழ்ச்சிகளைதவிர்தல்) போன்றவை மூலம் ஒரு சிலரிடம் வைரஸ் கிருமி காணப்பட்டாலும் தொற்றுவதை தவிர்கமுடியும்.
பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. சுகாதார அமைச்சு எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தருகின்றனர்.
நாங்கள் தாயர் நிலையிலேயே உள்ளோம். நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவர்களை பரிசோதிக்கவும் பாராமரிக்கவும் தயார் நிலையிலேயே உள்ளோம்.
வைத்தியசாலை கூட்டம் இரண்டு நாட்களுக்கு ஒருதடவை கூட்டி கலந்துரையாடி வருகிறோம். அவசர தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்துள்ளோம்.
எதுவிதமான ஐயங்கள் இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம். வடபகுதியை பொறுத்த வகையில் மிகுந்த கரிசனையோடும் அவதானத்தோடும் இருக்கின்றோம் என்பதை கூறிக்கொள்கிறேன். என்றார்.
கருத்துகள் இல்லை