Breaking News

மறு அறிவித்தல் வரும் வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என பிரான்ஸ் அறிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், மறு அறிவித்தல் வரும் வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என பிரான்ஸ் அறிவித்துள்ளது.
அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இதனை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் உள்ள குழந்தை பராமரிப்பு மையங்கள், சிறுவர் பாடசாலைகள், கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை என்பன மறு அறிவித்தல் வரை மூடப்படும் என அறிவித்தார்.
மேலும் வைத்தியசாலைக்கு அவசர தேவை கருதி செல்லும் நோயாளிகளை தவிர ஏனைய சாதாரண பரிசோதனைகளுக்கு செல்லும் நோயாளிகள் தமது வைத்தியருடனான சந்திப்புக்களை பிற்போடும் படியும் மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்க்கும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை