15 வயது சிறுமி ஒருவர் 8 மாத கர்ப்பம்-சிறிய தந்தையை கைதுசெய்ய நடவடிக்கைக
சிறுவர்
நன்னடத்தை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அவர்கள் குறித்த சிறுமியின் வீட்டை முற்றுகையிட்டு சிறுமியை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட
சிறுமி தற்போது சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்
குறித்த அசிங்கத்திற்கு சிறுமிக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய சிறுமியின் சிறிய தந்தையே காரணம் எனவும்; வாழைச்சேனை பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக
மேலும் தெரியவருதாவது,
கடந்த
8 மாதங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி தன்னுடைய தாயாருடன் கொழும்பில் வசிக்கும் சிறிய தந்தையின் வீட்டிற்கு சென்ற போது, சிறுமியின் சிறிய தந்தையினால் பாலியல் துஷ;பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இதன்காரணமாக
கர்ப்பணியான சிறுமியை பெற்றோர்கள் வீட்டிவ் மறைத்து வைத்திருந்த நிலையிலேயே சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில்,
சந்தேக நபரான சிறிய தந்தையை கொழும்பில் கைதுசெய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை