Breaking News

வடமராட்சி கிழக்கு, தென்மராட்சி, தீவகம் இணக்கம் ஊரடங்கைத் தளர்த்துவதற்கு இணக்கம்


வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது. தற்போது நீடிக்கப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினரும், அதிகாரிகளும் கருத்துக்களை வெளியிட்டனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர் ஊடரங்கு காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகள் ஆராயப்பட்டன. தமிழ்சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்கைத் தளர்த்த வேண்டாம் என்று சுகாதாரப் பகுதியினரும், பாதுகாப்புத் தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்தனர். யாழ்ப்பாணக் குடநாட்டில் வடமராட்சி கிழக்கு, தென்மராட்சி, தீவகம் ஆகியவற்றில் இணக்கம்  புத்தாண்டின் பின்னர் ஊரடங்கைத் தளர்த்துவதற்கு சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் ஒருமித்து இணக்கம் தெரிவித்தனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அந்தப் பிரதேசத்துக்குள் மாத்திரமே நடமாட அனுமதி வழங்கப்படும் எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது. தாவடி, அரியாலை, மானிப்பாயில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களின் நிலைமையைப் பொறுத்தே குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் ஊரடங்கைத் தளர்த்துவது தொடர்பான இறுதி முடிவை எடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை